Hitech Lab Student Report Card - மாணவர்களுக்கு வழங்குதல்‌ - DSE & SPD Proceedings

 உயர் தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல்‌ - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்


தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.




ந.க.எண்‌.76896/பிடி1/53/2017, நாள்‌ 15.02.2024




பொருள்‌: பள்ளிக்கல்வி - உயர்‌ தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) - உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குதல்‌ - மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டது - சார்பு


பார்வை : சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.4648/A4/Student Report Card/ SS/2023, நாள்‌.29.01.2024


பார்வையில்‌ காணும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநரின்‌ கடிதத்தின்படி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ செயல்படும்‌ (HI-TECH LABS) அரசு உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளி மாணவர்களுக்கு உயர்தொழில்‌ நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை வழங்குவது சார்ந்து நிதி ஒதுக்கீடு, மற்றும்‌ நடைமுறை வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட கடித நகல்‌ இத்துடன்‌ இணைத்து அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பப்படுகிறது. இதனை உரிய பள்ளிகளுக்கு அனுப்பி இக்கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறை வழிகாட்டுதல்களின்படி செயல்பட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.


Click Here to Download - Hi-Tech Lab - Report Card- Instructions to HMs & Teachers - Director Proceedings - Pdf



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள்

 பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள்


பள்ளிக் கல்வித் தறையின் கீழ் செயல்படும் திட்டங்கள் மற்றும் அதை செயல்படுத்தும் இயக்ககங்கள் குறித்த முழுமையான பதிவு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து வகை ஆசிரியர்களும் இதை அறிந்து வைத்துக் கொள்வது சிறந்ததாகும்


Click Here to Download - 57 Types of Schemes, Programs & Directorates in the School Education Department - Pdf



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Primary Teacher's Ennum Ezhuthum Online Training Web Page Now Open - Direct Training Link

 IMG-20240303-WA0008

எண்ணும் எழுத்தும் online  பயிற்சிக்கான link

👇👇👇👇

https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList


 1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 05.03.2024 முதல் 13.03.2024 முடிய இணைய வழியில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை ( Training Assessment ) மேற்கொள்ள வேண்டும்.


மேலும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 06.03.2024 முதல் 14.03.2024 முடிய இணைய வழியில் மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை ( Training Assessment மேற்கொள்ள வேண்டும்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் :

 

Income Tax Regime Selection Process

வருமான வரி old Regime / New Regime தேர்ந்தெடுக்க சில தகவல்கள் : 

1 ) 2 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 11 லட்சம் வரை old regime ok . 

2 ) 1 லட்சம் Housing Loan வட்டி இருந்தால் வருமானம் 10 லட்சம் வரை old regime ok . 

3 ) Housing Loan இல்லை என்றால் 8.5 லட்சம் வரை old Regime ok ( Savings - 80C 1.5 லட்சம் இருந்தால் ) மற்றபடி ஏனைய வருமான தாரர்கள்  New Regime ஐ தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை

 அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ம் தேதி தொடங்கியது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். இதனால், கல்வித்துறைக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவதோடு, அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.


தற்போது அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு போட்டி போடும் அளவுக்கு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் தனியாரை மிஞ்சும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.இந்த முறை ஆன்லைன் மூலமும் பள்ளி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுவதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில் 10-15 லட்சம் பேர் வரை அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் நாட்களில் ஆன்லைன் வழி மற்றும் நேரடி வழி சேர்க்கை முறை மூலம் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால்


1 நேரடியாக சேர்க்கை நடைபெறும் போது ஏற்படும் முறைகேடுகள் ஆன்லைனில் தவிர்க்கப்படும்.


2 மாணவ மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்ட முடியாது.


3 மாணவர்கள் எந்த பள்ளியில் அதிகம் சேருகிறார்கள், எங்கே பள்ளிகளில் தேவை அதிகம் உள்ளது என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.


4 போலி விண்ணப்பங்கள் பதிவு செய்வதை தவிர்க்க முடியும்.

இதற்காக இந்த வருடம் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நேரில் வரும் குடும்பங்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் அட்மிஷன் செய்யப்படும். ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல் எண் ஆகியவை மூலம் ஆன்லைன் சேர்க்கை செய்யப்படும். அதோடு இவர்களின் சமூகப்பிரிவுகள் தொடங்கி இடஒதுக்கீடு வரை அனைத்தையும் பள்ளி கல்வித்துறை எளிதாக கண்காணிக்க இது வசதியாக மாறும்.


இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அதற்கு தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் ஊரகப் பகுதிகளில்தான் அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர். இங்கு கல்வியை நிறைவுசெய்து வெளியே வரும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய ஆர்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி இந்த முன்னெடுப்பு சிறந்த முறையில் நடைபெற ஒத்துழைப்பினை நல்குவதோடு மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் நிகழ்வினை தங்களுடைய கள ஆய்வுப் பணிகளின் ஒரு நிகழ்ச்சி நிரலாக பட்டியலிட்டு கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.


2024-25ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர்ந்திட வேண்டும். மாணவர் சேர்க்கை பணி மற்றும் விழிப்புணர்வு சேர்க்கை பேரணி தங்கள் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கை செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர்

கூறியுள்ளார்.


* அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் பள்ளி முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர்.  அந்த வகையில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 548 குழந்தைகள் நிறைவு செய்து வெளியே வர இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக சேலத்தில் 19 ஆயிரத்து 242 குழந்தைகளும், அடுத்து மதுரையில் 18 ஆயிரத்து 127 குழந்தைகளும் உள்ளனர்.


மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படி, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வேண்டும்.


மேலும் வேறு பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள், மாணவர்களுக்கு அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடங்கள் வழங்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கை விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

IMG-20240304-WA0020

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - கல்வித்துறை அமைச்சர்தகவல்

 IMG_20240304_200304

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  தகவல்

Press News - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NHIS App and Web Portal Guidelines

 New Health Insurance Scheme for Employees and Pensioners - Launching of Information Technology ( IT ) solution software and Mobile Application for Employees and Pensioners under New Health Insurance Scheme ( NHIS ) - Certain instructions Issued - Regarding...👇

NHIS App and Web Portal Guidelines - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

INCOME TAX SELF DECLARATION 2024-25. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை

 


IMG_20240304_114614_wm

INCOME TAX SELF DECLARATION 2024-25


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான வருமான வரி பிடித்தம் செய்யும் முறை.


மார்ச் 10 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.


OLD REGIME


NEW REGIME


கட்டாயம் நிதி ஆண்டிற்கு ஒருமுறை தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் தானாகவே NEW REGIME தேர்வாகி விடும்.


நிதி ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நாம் தேர்வு செய்ய இயலும்.


Explanation - Pdf files - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

How to update new admission in EMIS School Login

 IMG_20240304_210025

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் த. ஆ கவனத்திற்கு, 


2024-25 புதிய மாணவர்கள் சேர்க்கை:


புதிய மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 முதல் நடைபெற்று வருகிறது அம் மாணவர்களை உடனுக்குடன் EMIS portal School Login ல் சேர்க்கை செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 


Students--> Enrollment --> Students Admission Campaign(AY2024-25).


மிக முக்கியம்


Student - students admission (AY 2023-24) மெனுவில் பதிவேற்றம் செய்யகூடாது

How to update new admission in EMIS School Login👇

Download pdf file


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10th Public Exam Tips - கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்!

 


IMG-20240303-WA0019

கணிதத்தில் சென்டம் எடுக்க சில சிம்பிள் பார்முலாக்கள்!

Public Exam Tips


கணிதம் என்றாலே பலருக்கும் பயமாக இருக்கிறதா? டோன்ட் வொர்ரி மாணவர்களே, இங்கே ஆசிரியர்கள் சொல்லும் சில பாயின்ட்டுகளைப் பின்பற்றி தேர்வைச் சந்தியுங்கள். கணிதத்தில் சென்டம் எடுங்கள்.


பத்தாம் வகுப்பு (10th/ SSLC/TN Board):


1. 'நாம் கணக்குல வீக்கான ஸ்டூடன்ட்' என்ற எண்ணத்தை இந்த நிமிடத்திலிருந்து ஒதுக்கி ஓரம் கட்டுங்கள். உங்கள் ஆசிரியர் எவையெல்லாம் நிச்சயமாக வரும் எனச் சொல்லியிருந்தாரோ, அந்தக் கணக்குகளையெல்லாம் பலமுறை  சால்வ் பண்ணிப் பாருங்கள். 


2. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை, ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்யுங்கள். இதைச் செய்தாலே, முழு நம்பிக்கை வந்துவிடும். 

3. இரண்டரை மணி நேரத்தில், 2 மணி நேரம் மட்டும் எக்ஸாம் எழுத எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்த அரைமணி நேரத்தில், போட்ட கணக்குகள், அவற்றின் ஸ்டெப்கள், விடைகள் ஆகியவற்றை கிராஸ் செக் செய்யுங்கள். சில கணக்குகளைப் பார்த்தவுடன், 'ஆஹா, இது நமக்கு நல்லாத் தெரியுமே' என்று கடகடவெனப் போட்டுவிடுவீர்கள். ஆனால், நீங்கள் படித்த கேள்வி வந்திருந்தாலும், அதில் ஏதாவது ஒரு எண் மாறியிருக்கலாம். அதைக் கவனிக்காமல் எழுதியிருந்தால், மதிப்பெண்ணை முழுதாக இழந்துவிடுவீர்கள். 

4. ஒரு மதிப்பெண் கணக்கில் குழப்பம் இருந்தால், இடம் விட்டுவிட்டு 5 மதிப்பெண், 10 மதிப்பெண் கணக்குகளுக்குச் சென்றுவிடுங்கள். குழப்பங்களுக்கு நேரம் கொடுத்துத் தயங்கி நிற்காதீர்கள். 


5. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் போர்டு எக்ஸாமில் கேட்கப்பட்ட கணக்குகளை சால்வ் பண்ணிப் பாருங்கள். 


6. சேப்டர் 2, 3, 5, 6, 7 ஆகியவற்றில் இருக்கும் ஒரு மதிப்பெண் கணக்குகள் அனைத்தையும் ரிவிஷன் பண்ணிவிடுங்கள். 

7. ஜியாமென்ட்ரியில் உதவிப்படம், உண்மைப்படம், அளவுகள், கோணங்கள் ஆகியவை விடுபடாமல் வரைந்தால்தான் 10 மதிப்பெண் கிடைக்கும். 


8. வரைபடத்தில் (Graph) அச்சுகள் குறித்தல், ஆரிப்புள்ளி குறித்தல், அளவுத்திட்டம், அளவுகள் குறித்தல் என எல்லா ஸ்டெப்ஸும் சரியாக இருந்தால்தான் முழு மதிப்பெண். 


9. முதல் சாப்டரில் 15 மார்க்கும், நான்காவது சேப்டரில் 10 மார்க்கும் நிச்சயம் எடுக்கலாம். அவற்றிலிருந்து கேள்விகள் வரும் என்பதாலும், இந்த இரண்டு சேப்டரில் இருக்கும் கணக்குகளை சால்வ் பண்ணிப் பார்க்க மறந்துவிடாதீர்கள். 


பிளஸ் டூ (HSC):


1. ஒரு மதிப்பெண் கணக்குகள் புத்தகம் முழுக்கச் சேர்த்து 271 இருக்கின்றன. இதை ஐம்பது ஐம்பதாகப் பிரித்து, 50 கணக்குகளுக்கு இரண்டு மணி நேரம் என டைம் டேபிள் போட்டுப் பாருங்கள். இதன்மூலம் 30 மதிப்பெண் உங்களுக்கு உறுதியாகிவிடும். 


2. அணிகள் (35 வினாக்கள்), கலப்பெண்கள் (16 வினாக்கள்), தனிநிலை கணக்கியல் (22 வினாக்கள்), வகை நுண்கணிதம் II (11 வினாக்கள்) என ஜஸ்ட் 84 கணக்குகளே. 6 மார்க் வினா-விடை பகுதிக்காக மாணவர்கள் சால்வ் செய்து பார்க்கவேண்டியது. இந்த 84 கணக்குகளை நன்கு போட்டுப் பழகியிருந்தால், 42 மதிப்பெண்கள் கியாரன்டி. 

3. அடுத்து, 10 மதிப்பெண் கணக்குகள் 7 போடவேண்டும். இதற்கு, வெக்டர் இயற்கணிதத்தில் 20 கணக்குகள், பகுமுறை வடிவ கணிதத்தில் 28 கணக்குகள், தனிநிலை கணக்கியலில் 15 கணக்குகள், கலப்பெண்களில் 16 கணக்குகள் என 79 கணக்குகளைப் போட்டு பழகினால், உங்களுக்கு 70 மதிப்பெண் கன்ஃபார்ம். 


4. '10 கணக்குகளை சால்வ் செய்து பார்த்தால் போதும்; 15 கணக்குகளைப் சால்வ் செய்து பார்த்தால் போதும்' எனச் சொல்லாததற்கு காரணம், அடுத்த வருடம் இன்ஜினீயரிங் படிக்கப்போகிறீர்கள் என்றால், அப்போது கஷ்டம் ஏற்படும். கணக்குகளை செலக்டிவாக சால்வ் செய்து பார்ப்பதற்குப் பதில், இத்தனை கணக்குகளுக்கு இவ்வளவு நேரம் என டைம் மேனேஜ்மென்ட் செய்து, அனைத்தையும் சால்வ் செய்து பழகுங்கள். இதன்மூலம் 142 மதிப்பெண்களைச் சுலபமாக எடுத்துவிடலாம். 


5. வலைதளங்களில் அரசுப் பொதுத் தேர்வுக்கான வினா-விடைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எத்தனை கணக்குகள் உங்களுக்கு சால்வ் செய்யத் தெரிகிறது என்று செக் பண்ணுங்கள். 


6. உருவாக்கப்பட்ட வினாக்கள் (created type) பார்ப்பதற்குக் கடினமாகத்தான் தெரியும். பதட்டப்படாமல் வாசித்துப் புரிந்துகொண்டு விடை எழுதுங்கள். 


7. கட்டாய வினாக்கள் பாடப்பகுதியின் எந்த இடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். 


8. பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு 5 நாள்கள் விடுமுறை இருப்பதால், பதற்றப்படாமல் பரீட்சைக்குத் தயாராகுங்கள். 


பத்தாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ):


1. சி.பி.எஸ்.சி. கணிதத் தேர்வைப் பொறுத்தவரை 15 சதவிகிதம் மிக எளிதாகவும், 70 சதவிகிதம் சற்று எளிதாகவும், 15 சதவிகிதம் மட்டுமே கடினமாகவும் இருக்கும். அதனால், 85 மார்க் எடுப்பது மாணவர்களின் உழைப்பில்தான் இருக்கிறது. 


2. ஒருநாள்விட்டு ஒருநாள் என்று 15 சேம்பிள் கேள்வித்தாள்களை ரிவைஸ் பண்ணுங்கள். 


3. 2011-ம் வருடத்திலிருந்து 2017-ம் வரைக்குமான பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களில் அதிக தடவைகள் கேட்கப்பட்ட கணக்குகளை ஒரு தடவை ரிவிஷன் செய்துவிடுங்கள். 


4. சால்வ் செய்து பார்க்கவேண்டிய கணக்குகளைவிட, எக்ஸாம்பிளாக கொடுத்த கணக்குகள் கடினமாக இருக்கும். இவற்றை பிராக்டிஸ் செய்துவிட்டால், பாடப்பகுதிகளில் இருக்கும் கணக்குகளை எளிதாக சால்வ் செய்துவிடலாம். 


5. கணிதத்தைப் பொறுத்தவரை அதை நம்பராக பார்க்காதீர்கள். கான்செப்ட்டாக பாருங்கள். அப்போதுதான் சென்டம் எடுக்கமுடியும். அதையும் புரிந்துகொண்டு போடுங்கள். 


பன்னிரண்டாம் வகுப்பு (சி.பி.எஸ்.இ)


1. 100 சதவிகிதம் மதிப்பெண் எடுக்க, 100 சதவிகிதம் படிக்கவேண்டும் என்பதுதான் சி.பி.எஸ்.சி. தியரி. அதனால் எல்லா சேப்டர்களையும் பிராக்டிஸ் செய்வதுதான் நீங்கள் செய்யவேண்டியது. நோ காம்ப்ரமைஸ். 


2. புத்தகத்தில் இருக்கும் அத்தனை ஃபார்முலாக்களையும் ஏற்கெனவே தனியாக வைத்திருக்கிறீர்கள்தானே... தினமும் காலை எழுந்தவுடன் அவற்றை ஒருமுறை பாருங்கள். 


3. அதிக மதிப்பெண் கேள்விகள் வருகிற செக்‌ஷன் 'C' மற்றும் 'D'-ஐ முதலில் எழுதிவிடுங்கள். 10 மதிப்பெண் கணக்குகளை முதலில் போட்டுவிட்டால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துவிடும். 


4. செக்‌ஷன் A-வில் உள்ள கணக்குகளைப் போட 8 நிமிடங்கள், செக்‌ஷன் B-யில் உள்ள கணக்குகளுக்கு 25 நிமிடங்கள், செக்‌ஷன் C-யில் உள்ள கணக்குகளுக்கு 70 நிமிடங்கள், செக்‌ஷன் D-க்கு 60 நிமிடங்கள் எனத் திட்டமிட்டு எழுதிமுடியுங்கள். 


5. ஒரு கணக்கின் ஏதோ ஒரு ஸ்டெப் உங்களுக்கு மறந்துவிட்டதால், அதையே யோசித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். அதற்கான இடத்தை விட்டுவிட்டு, அடுத்த கணக்குக்குப் போய்விடுங்கள். 


6. கணிதத்தைப் பொறுத்தவரை, விடையைத் தவறாகப் போட்டுவிட்டாலும், ஸ்டெப்களுக்கு மதிப்பெண் கிடைக்கலாம். 'தெரிந்த கணக்குக்கே விடை சரியாக வரவில்லையே' என்று பயத்தில் நின்றுவிடாதீர்கள். 


7. கிராப் பகுதியை அடித்தல், திருத்தல் இல்லாமல் நீட்டாக வரையுங்கள். 


8. நெகட்டிவ் மார்க் கிடையாது என்பதால், சில கணக்குகள் தெரியவில்லையென்றாலும் அட்டெண்ட் செய்யத் தயங்காதீர்கள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீங்கள் நலமா ? - முதல்வரின் புதிய திட்டம்

 dinamani%2F2024-03%2Fcd0f9225-39e2-4289-b1a0-cb66192d6b4f%2Fstalin

நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்களுக்கு சல்லிக்காசு கூட நிதியை பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்ப்படுகிறதா என்பதை நீங்கள் நலமா திட்டம் மூலம் கண்காணிக்கப்படும்.


திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கடலங்குடி கிராமத்தில் புதிய படுகை அணை அமைக்கப்படும். மீன் இறங்குதளம் புதுப்பிக்கப்படும். திருவோணம் வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றார். முன்னதாக மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Income Tax Regime Optional Letter

மாணவர் சோ்க்கை பேரணி - விழிப்புணர்வு வாசகங்கள்

 

IMG_20240303_205409

விழிப்புணர்வு வாசகங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு துவக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சோ்க்கை பேரணி - விழிப்புணர்வு வாசகங்கள்👇

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News