அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - DSE செயல்முறைகள்!!!

 


  IMG_20231116_222817

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் மின் ஆளுமை ( e - Office ) நடைமுறைப்படுத்தும் பொருட்டு முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் கோப்புகளை கையாளும் பணியாளர்களின் விவரங்கள் பார்வை -3 ல் காண் கடிதத்தின்படி பெற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கோப்புகளை கையாளும் தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கூடுதலாக சமர்பிக்க இயக்குநர் , தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் கோரப்பட்டுள்ளது.

அதன்படி இணைப்பில் கண்டுள்ள இரு படிவங்களில்பள்ளிகளில் பெற்று பூர்த்தி செய்து Excel Format -ல் F- பிரிவின் fsectioncose23@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு 20-11-2023 தேதிக்குள் அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளளப்படுகிறார்கள் . படிவம் 1 - ல் நிரப்பபட்ட ( filed post ) தலைமை ஆசிரியர் , மற்றும் அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கைக்கு மாறாமல் படிவம் 2 - ல் உள்ள கலங்களுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்கள் தவறாமல் பூர்த்தி செய்தல் வேண்டும் - தரவுகளில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் சார்ந்த அலுவலரே பொறுப்பாவார் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 இணைப்பு👇

 DSE - E-Office Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல்  கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - PG Deployment Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)

 

தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோப்புகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளும் எளிதாகின. இப்போது கேமராவைப் பயன்படுத்தி கணிதச் சமன்பாடுகளைக்கூடத் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ‘போட்டோமேத்’ (PhotoMath) செயலி மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது!


கூகுள் தயாரிப்பு: கணிதம் மாணவர்களுக்கு பாகற்காய் போல கசக்கும் என்பது பொதுவான மனநிலை. அடுக்கடுக்கான கணக்குகளைப் பார்த்து மலைத்துப் போவோர் உண்டு. ஆனால், கணிதக் கற்றலை எளிமையாக்கி இருக்கிறது ‘போட்டோமேத்’ செயலி. குரோஷியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பம்சத்தைப் பார்த்த கூகுள் நிறுவனம், கடந்த 2022இல் விலைக்கு வாங்கியது. ‘போட்டோமேத்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.


அடிப்படைக் கணிதக் கணக்குகள் முதல் வடிவியல், இயற்கணிதம், கால்குலஸ் வரை பல கணக்கு முறைகளையும் ‘போட்டோமேத்’ செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். செயலியின் கேமராவில் கணிதக் கேள்வியைப் படம் பிடித்து பதில் கேட்டால், நொடிப்பொழுதில் விடைகளைத் தருகிறது ‘போட்டோ மேத்.’ ஒரு கணக்கின் முதல் பகுதியில் தொடங்கி படிப்படியாக விளக்கி, இறுதியில் விடை தருவதால், மாணவர்கள் எளிதாகக் கணக்கைப் புரிந்துகொள்ள முடியும். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘போட்டோமேத்’, கணக்குப் பாடம் படிப்பதற்கென அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. உலக அளவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இச்செயலி வழியே கணிதம் பழகுகின்றனர்.


குறிப்பு எடுக்கலாம்: கற்றுக்கொள்ள மட்டுமல்ல, கற்பிக்கவும் ‘போட்டோமேத்’ பயன்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்களும் திறன்பேசி வாயிலாக பிள்ளைகளுக்குக் கணிதப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். கணிதக் கணக்குகளை கேமராவில் படம் பிடித்து பதில் கேட்கலாம் அல்லது ‘போட்டோ மேத்’ செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கால்குலேட்டர் வசதியைப் பயன்படுத்தலாம். கணக்குகளை அதில் பதிவிடுவதன் மூலம் ‘போட்டோமேத்’ அதற்கான பதில்களைத் தரும். செயலியில் பதிவுசெய்யப்படும் கணக்குகளை ‘புக்மார்க்’ வசதி மூலம் சேமித்துக்கொள்ளலாம்.


தேவையிருப்பின் சேமித்து வைத்த கணக்குகளை மீண்டும் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். கணக்கு முறைகளைப் புரிந்துகொண்டு படித்தால் கணிதம் எளிது. ‘போட்டோமேத்’ செயலியைப் பயன்படுத்தி சந்தேகங்களை விளக்கிப் புரிந்துகொள்ளலாமே தவிர, வீட்டுப் பாடம் முடிக்க அல்லது ‘காப்பி’ அடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது தவிர, கூடுதலாக காணொளி வழி விளக்கங்களுக்கும், கணிதம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் ‘போட்டோமேத் பிளஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். எனினும் பெரும்பாலான பாடங்கள் அடிப்படை ‘போட்டோமேத்’ செயலி யிலேயே கிடைப்பதால் கணிதப் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது இச்செயலி.

>>> PhotoMath செயலியை Install செய்ய இங்கே சொடுக்கவும்...


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு

 


IMG_20231117_095227

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என  அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், “அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், “லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.


மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாள்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.


விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மாணவர்கள் பாதுகாப்பு: பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தல் கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 17.11.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.11.2023


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :299


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.


விளக்கம்:


உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.


பழமொழி :

Familiarity breeds contempt


பழக பழக பாலும் புளிக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :


ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம். ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :


1. கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?


விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்


2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?

விடை: உருளைக்கிழங்கு


English words & meanings :


 tentacles –soft long leg like structure in sea animals like octobus. சிலவகைக் கடல் விலங்குகளில் காணப்படும் கால்கள் போன்ற நீண்டு மெலிதான மென் பகுதிகளில் ஒன்று; உணர்ச்சிக்கொடுக்கு; பற்றிழை.


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ,இருமல் ,சுவாசக் கோளாறு நீங்கும்.


நவம்பர் 17 இன்று


லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்


நீதிக்கதை


 முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர்- ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே 'மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது... பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது... ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது... நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே... வெளியில் கொண்டு வர முடியவில்லை... குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி... குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான்.   அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது. கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான்... அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது. கை வெளியில் வந்து விட்டது என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன.  "நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து...குரங்கைப்போல அகப்பட்டு விடுகிறோம்...


இன்றைய செய்திகள் - 17.11.2023


*தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18ம் தேதி கூடுகிறது.


* சந்திரயான் - 3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ அறிவிப்பு.

* அமெரிக்காவில் வசிப்பவர் ஆரோன் பார்த்தலோமி. இவர் பென்சில் சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


* மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.


வாட்ஸ் அப் சாட் : ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


*ரோஹித் சர்மா இந்தியாவின் ரியல் ஹீரோ நசீர் ஹுசைன் புகழாரம்.


Today's Headlines


*The special session of the Tamilnadu Assembly will be held on the 18th.


 * Chandrayaan-3 rocket part has fallen into sea: ISRO statement

 * Aaron Bartholomew is a US resident.  He holds the Guinness record for pencil collection.


 * Security arrangements are intense for the  tomorrow's polling in Madhya Pradesh and Chhattisgarh .


 *Whats Up Chat*: It is informed that all the history backup information will come under Google Cloud Storage restrictions' terms and conditions.


 *Rohit Sharma is India's real hero:  praises  Naseer Hussain.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE - FA ( B ) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

IMG-20231116-WA0014

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA ( B ) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    - TN EE MISSION

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் - தேர்வுத்துறை

 கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக் கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி மாணவர்கள் , தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும். பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும் , தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப் பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

 

IMG_20231116_140205

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள்!

 10th & +1 NR Preparation Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாணவர்களின் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு

 


 

அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாணவர்களின் சிறந்த 10 திட்டங்களுக்கு (ப்ராஜக்ட்) தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தெரிவித்தார்.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ‘நான் முதல்வன் நிரல் திருவிழா’ பயிற்சி பட்டறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு தலைமை வகித்து உமாசங்கர் பேசியதாவது: "மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்திலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.


‘நிரல் திருவிழா’ என்பது உள்ளூர் தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையின் மூலம் மாணவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக ‘நிரல் திருவிழா - நான் முதல்வன்’ என்ற பெயரில் பிரத்யேக வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது.


இதில் அரசு மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பதிவேற்றலாம். ஒவ்வொரு துறையும் அரசு குறிப்பிட்ட 10 தலைப்புகளில் தொழில் நுட்ப பிரச்சினைகள் குறித்து பதிவேற்ற வேண்டும். வலைதளத்தில் குறிப்பிடப்படும் தரவுகள் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.


இப்புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் புதிய கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான ‘புத்தாக்க தேவைகள், பிரச்சினைகளை கண்டறிதல்’ என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.


அரசு அலுவலகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஆண்டு ‘ப்ராஜக்டாக’ கொடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் சிறந்த 40 குழுக்களின் ‘ப்ராஜக்ட்’ தேர்வு செய்யப்பட்டு, முதல் 10 ப்ராஜக்ட்-களுக்கு தலா ரூ.1 லட்சம், 30 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அரசால் வழங்கப்படும்.


‘புத்தாக்க பிரச்சினைகள் தேவைகள்’ குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Guidelines for Examination Centres of AMP NTS 2023.

 IMG_20231116_112323

The following guidelines are issued and should be necessarily followed by all NTS Examination centres


Guidelines for Examination Centres of AMP NTS 2023 - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Proceedings

 IMG_20231116_113322

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி ஆசிரியர்களுக்கு பல்வேறு தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2023-24 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்டுவருகிறது.


இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் நவம்பர் -2023 ஆம் மாதத்திற்கான ( CRC ) பயிற்சி வருகின்ற 28.11.2023 முதல் 30.112023 வரை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து கீழ்குறிப்பிட்டுள்ள தேதிகளில் வட்டார அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


DPT Training - CEO Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

11th Public Exam Time Table 2024 Download

10th Public Exam Time Table 2024 Download

12th Public Exam Time Table 2024 Download

 12th Public Exam Time Table 2024 Download

12th, 11th, 10th Public Exam 2024 | Combined Time Table - PDF Download Here

 




அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 நடப்புக் கல்வியாண்டில் ( 2023-24 ) 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் ( BT Staff Fixation ) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் ( BT Deployment Counselling ) மூலம் வருகின்ற 20.11.2023 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( Off line : Counselling ) சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி நடத்தி முடிக்கப்படவேண்டும்.


DSE - BT Deployment Counselling Instructions 👇

 Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


10,11,12th Public Examination 2023 - 2024 | Time Table & Result Date Announced

10,11,12th Public Examination 2023 - 2024 | Time Table


10th Time Table - Download here


11th Time Table - Download here


12th Time Table - Download here


தேர்வு முடிவுகள்


12ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு மே 10ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

IMG_20231116_094059_wm

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.45.56

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும்.

பதினோராம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.46.42

* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது .

* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.43.55

* 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் .

* 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும் 

என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார். 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News