தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல் பணிமாறுதல் கலந்தாய்வு .. மிக முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அவற்றில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

எனினும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் இதற்குரிய தேதி பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மாவட்டம்விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்றும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 8ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் புதியதாக காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால், அதனை நிரப்ப பதவி உயர்வு வழங்குவதற்கும், முன்பே பணி நிரவலில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 25/02/2022 ஆம் தேதிக்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும்தான் நடைபெறுகிறது.

2021-2022 பொதுமாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களை நீக்கவேண்டும். ஆனால் உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் போன்றவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை சார்பாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 21/06/22 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் தான் முதன்மை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அப்பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென முன்னுரிமை பட்டியல் எப்பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ, அந்த பதவியில் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை வைத்து நிர்ணயம் செய்யப்படும் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - அரசாணை வெளியீடு.


IMG_20220629_170509

பள்ளிக் கல்வி - மறுநியமனம் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - தமிழக அரசு ஆணை வெளியீடு.

GO NO : 153 , Date : 28.06.2022 - Re Employment GO - Download here...

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் மாதாந்திர பாடத்திட்டம் pdf download

6 முதல் 10-ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் மாதாந்திர பாடத்திட்டம் pdf download


EMIS News - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்"... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!

தமிழகத்தில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

EMIS தளத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை அறிய முடியும். எனவே உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள சிஇஓ-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?

 


தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முறை மற்றும் அவர்களுக்கான சம்பளம் ஆகிய விவரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்

இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை

இந்தப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம்

இடைநிலை ஆசிரியர்கள் – ரூ. 7,500

பட்டதாரி ஆசிரியர்கள் – ரூ. 10,000

முதுநிலை ஆசிரியர்கள் – ரூ. 12,000

காலியிடங்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

இந்த காலியிடங்களைப் பற்றிய விவரங்கள் அறிய, இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டு, எந்ததெந்தப் பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ளப் பள்ளியில் காலியிடங்கள் இருப்பது தெரிய வந்து, நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து, வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், அடுத்த ஓராண்டிற்கு மேற்கூறிய ஊதிய அடிப்படையில் பணிபுரியலாம்.

எண்ணும் எழுத்தும் - பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் - DEE & SCERT Dir Proceedings

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள்!





புதிய மாணவர் சேர்க்கை - உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - Commissioner Proceedings

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஏற்கனவே கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்யப்பட்டுள்ளன.


தற்போது பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் அரசு / அரசு உதவி பெறும் / பிறவகை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட விவரங்கள் Common Pool- லிருந்து எடுத்து உரிய பள்ளியில் பதிவுகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) செய்யப்பட வேண்டும்.


 அனைத்துவகை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்தால் மட்டுமே துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் என்பதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களையும் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை EMIS- ல் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022



திருக்குறள் :

பால் : பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம் :மானம் 

குறள் - 970 
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 

பொருள் - தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

பழமொழி :

Bare words buy no barely.
வெறும் கையால் முழம் போட முடியுமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்

பொது அறிவு :

1. கரையான் நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டைகள் இடும்? 

30,000 

2. கப்பல் மிதக்கும் தத்துவம் என்ன? 

ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

English words & meanings :

liability - the state of being responsible, noun. ஒன்றுக்குப் பொறுப்பேற்கும் தன்மை. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

NMMS Q 13 : 

மஞ்சு 29.2.1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாட்களை கொண்டாடியிருப்பார்? 

விடை : 9

நீதிக்கதை

அன்னையின் வளர்ப்பு

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 

ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.

இன்றைய செய்திகள்

29.06.22

* நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

* இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,073 ஆக பதிவாகியுள்ளது.

* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடபிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்  2-வது சுற்றுக்கு முன்னேறினார்.




* அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 208 கி. மீ வேகத்தில் பந்து வீசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

* The Federal Ministry of Environment has announced a nationwide ban on the use of disposable plastic products from July.

 * India's daily covid - 19 cases are increasing by 45 percent in a single day.  The number of daily govt casualties in the country is reported to be 17,073.

 * Vice-Chancellor of the University of Tamil Nadu. Ms. Geethalakshmi said that one can apply for the undergraduate courses at the Tamil Nadu Agricultural University, Coimbatore from today till the 27th of next month.

 * Anna University has introduced 40 new optional courses for engineering students.  Interested students can now take the desired subjects as their preferred subjects.

 * Ian Morgan, England's action batsman and World Cup-winning captain for England has announced his retirement from international cricket.

 * Current champion Novak Djokovic advanced to the second round at the Wimbledon Tennis Men's Singles.

 * India's Bhuvneshwar Kumar 280k in the T20I match against Ireland.  He set a new world record by throwing the ball at a speed of 208 k.m.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!



திருச்சி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

திருச்சி  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!





வேலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

வேலூர்  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!



கரூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

கரூர்  மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD


விழுப்புரம் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!


CLICK HERE TO DOWNLOAD




அரியலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!




ராணிப்பேட்டை மாவட்ட காலி பணியிடங்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காலி பணியிடங்கள் விவரம்



கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!

கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!!!


தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு!

தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு!


G.O 53 - விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் - தமிழக அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது. 


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, 


அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.


 தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 




SMC - SGT, BT, PG Vacancy List Published



  SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Ariyalure District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - 



SMC - SGT, BT, PG Vacancy List - Kallakurichi District - Download Here