`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை. அதேபோல பல்வேறு பள்ளிகளில் ஒற்றை இலக்கங்களில் தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குநர் ஆசிரியர்கள் சங்கங்களில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் ஆசிரியர் சங்கங்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

ஒரு மாணவர் கூட இல்லாத 22 பள்ளிகளில் பத்து மாணவர்களைச் சேர்த்தால் இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த பள்ளிகளில் இரட்டை இலக்கத்தில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும். அதற்காக மாணவர் சேர்க்கை பேரணி நடத்தவும் தொடக்கக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Flash News : 7 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 CEO அந்தஸ்தில் உள்ள 7 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

DEO அந்தஸ்தில் உள்ள 4 பேருக்கு, CEO ஆக பதவி உயர்வு. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

* மதுரை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட CEO - க்கள் மாற்றம்

* தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் வெற்றிச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட CEO - ஆக நியமனம்.

* புதுக்கோட்டை CEO சத்தியமூர்த்தி , தஞ்சை மகாராஜா சரபோஜி சாஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக மாற்றம்.


* திருவள்ளூர் CEO ஆறுமுகம், பாடநூல் கழக துணை இயக்குநராக மாற்றம்.




* நாமக்கல் , உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு DEO - க்கள் முறையே திருவள்ளூர், மதுரை, நீலகிரி CEO - ஆக நியமனம்.




ITK - Reading Marathon வாசித்தல் பயிற்சியினை சிறப்பாக செயல்படுத்த சில ஆலோசனைகள்!

 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் இன்று முதல் ஜூன் 12 வரை Reading Marathon  ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


அதற்காக நீங்கள் Read Along செயலியை டவுன்லோட் செய்து உங்களது ஒன்றியத்தினை பதிவு செய்து( *ஒருமுறை block code கொடுத்து பதிவு செய்து விட்டால் அதை எக்காரணம் கொண்டும் ரீடிங் மாரத்தான் முடியும் வரை delete செய்து விடக்கூடாது* ), மாணவர்களைக் கொண்டு வாசிக்கும் பயிற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.


🔴ஒருவேளை மாணவர்கள் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தால் தற்போது மையங்களுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் வாசிப்புப் பயிற்சி அளிக்கவும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி மையங்களுக்கு வருவதற்கு அறிவுறுத்தவும்..


இல்லம் தேடி கல்வி மொபைல் app-ல் தேதி வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் வாசித்தலுக்கு புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


🔴மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு கூடுதலாக நமது Read Along  செயலியில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.


அந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதை முடித்த பிறகு கூடுதலாக எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.


🔴 மாணவர்கள் வாசிக்கும்போது கூடுமானவரையில் சரியான உச்சரிப்பினை தெளிவாக உச்சரிக்க செய்து அதன்படி வாசிக்க பழக்குங்கள் அப்பொழுதுதான் மாணவர்கள் நிறைய ஸ்டார்களை போனசாக பெற இயலும். அதேபோன்று எவ்வளவு விரைவாக வாசிக்கிறார்கள் அதன் வேகத்தைப் பொருத்து ஸ்டார்கள் கூடுதலாக கிடைக்கும்.


ஒரு புத்தகத்தை ஓபன் செய்தால் அதனை முழுமையாக வாசித்து முடிக்கவும். 


🔴குழந்தைகள் ஆங்கிலக் கதைகள் வாசித்தலில் சிரமப்பட்டால் அவர்களுக்கு பிடித்த தமிழ்க் கதைகளையே நிறைய வாசிக்க சொல்லுங்கள் அவர்கள் விருப்பப் பட்டால் ஆங்கில கதைகளையும் வாசிக்கட்டும்.


மாணவர்கள் விரும்பினால் அவர்கள் வீடுகளிலும் வாசிப்பதற்கு ஏதுவாக அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் Read Along செயலியை இன்ஸ்டால் செய்து Block code பதிவு செய்து அதை எவ்வாறு கையாள்வது என்பது  குறித்து மாணவர்களுக்கு  தன்னார்வலர்கள் வழிகாட்டலாம்..

National Teachers Award 2022 - Direct Link

ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம்....


இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


கீழே உள்ள இணைப்பில் தாங்கள் விவரங்கள் பதிவேற்றவும்.


Teachers can apply for national best teacher award Direct link - View here...

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்கம் - குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு.


GO NO : 98 ,Date : 01.06.2022 - Tamilnadu Education policy Committee GO - Download here

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்- நிதியமைச்சர் புதிய விளக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது.  

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். 

இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. 

இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தொகைக்குஉரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.

இத்தொகையை 2003-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும். 

அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் ரூ.53,555.75 கோடியாக உள்ளது. 

இத்தொகையில் ரூ.41,264.63 கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதைதான் பின்பற்றினார்கள்.

இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 

எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

எதையும் மறைக்காமல், ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் வைக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. 

தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, இத்தகைய செய்திகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி

சென்னை மாநகராட்சி மூலம் 281 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என நடத்தப்படும் இப்பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.




கொரோனா காலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி தொடங்கப்படுகின்றன.

ஆனாலும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அட்மிஷன் உறுதி செய்யப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிகளவு மாணவர்களை சேர்க்க மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் உள்ள பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுளது.

குழந்தைகள் வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு கலந்தாய்வு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் கிடைக்கும் சலுகைகள், கல்வி உபகரணங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்க காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளி திறந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காலைஒ 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை அருந்திவிட்டு வகுப்பிற்கு செல்லவும் முடிவு செய்யப்படுகிறது.

அம்மா உணவகங்களில் இருந்து விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் 13-ந் தேதி முடிந்தன.

இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் மாணவ- மாணவிகளுக்கும் ஜூன் மாதம் 12-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5-ந் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிக்கல்வி துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும்படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் உத்தரவிட்டுள்ளார்.

கோடை விடுமுறை குறைக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்.. துணைத்தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 பேர் பங்கேற்கவில்லை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை இந்த ஆண்டு நடைபெற உள்ள துணைத் தேர்வில் உடனடியாக தேர்வு எழுத வைக்கும் வகையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிந்து தேர்வு எழுத வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய பொதுத்தேர்வு அண்மையில் முடிவடைந்தது. 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. கொரொனோ பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு  மீதான அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராததற்கு காரணமாக முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் மொத்தம் 6,49,467 பேர் பொதுத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசு தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவ/மாணவியர்  10th, 11th, 12th பொதுத்தேர்வு எழுதாத மாணவ/மாணவியரை 'உடனடித் துணைத் தேர்வில்'  கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் - SCERT Proceedings

06.06.2022 முதல் 5 நாட்கள் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும்  பயிற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.





June 2022 - School Dairy - Leave, Working, RL & Training Days List


ஜூன் மாத கல்வி நாட்காட்டி


✅ 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் தொடக்கம். வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது


✅ BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022


✅ 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022 


✅ 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள். 


✅ 4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள் 


✅ STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு)


✅ 6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022 


✅ CRC MEETING - 18.06.2022 


✅ 20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு 


✅ 27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு


✅ R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது.


விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், பணி இன்று தொடங்குகிறது.

முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.


எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தை பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வாகின. அதில் முதல்கட்டமாக 67 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி மற்றும் சமூகநலத் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் விவசாயம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த தொழிற்கல்வி பாடம் 2019-ம் ஆண்டு 184 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் 29,456 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.


இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2022-23) முதல் 9, 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது; உயர்நிலை வகுப்புகளில் உள்ள தொழிற்கல்வி பாடத்தை நிறுத்துவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2022-23-ம் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் இடம்பெறாது. 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.

அதற்கேற்ப 184 பள்ளிகளில் உள்ள தொழிற்பயிற்சி ஆய்வகங்களின் உபகரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வழக்கம்போல் 11, 12-ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை படிப்பார்கள் என்றனர்.

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதால், 150-க்கும் அதிகமான தற்காலிக பயிற்றுநர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - அரசு தேர்வுகள் இயக்ககம்




பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது 5ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது